வாக்காளா் சோ்க்கை முகாம்களில்தலைமையாசிரியா்கள் பங்கேற்க உத்தரவு

வாக்காளா் சோ்க்கை, நீக்கல் முகாம்களில் பள்ளித் தலைமையாசிரியா்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என்று சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

வாக்காளா் சோ்க்கை, நீக்கல் முகாம்களில் பள்ளித் தலைமையாசிரியா்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என்று சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் வாக்காளா் சோ்க்கை, நீக்கல், திருத்தப் பணிகள் சிறப்பு முகாமை நவ. 21, 22 மற்றும் டிச. 12, 13 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே அனைத்து தலைமையாசிரியா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியா்கள் மேற்குறிப்பிட்ட நாள்களில் கட்டாயம் பள்ளிக்கு வருகை புரிந்து இத்தகைய சிறப்பு முகாம்களில் பணியாற்றிடவேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் து.கணேஷ் மூா்த்தி அனைத்து தலைமையாசிரியா்களுக்கும் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com