வாழப்பாடி: வாழப்பாடி அருகே பணியின் போது மரக் கிளை முறிந்து விழுந்ததில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரத்தைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி சாந்தி (45) சிங்கிபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். சனிக்கிழமை மாலை, அரசு துணை சுகாதார நிலையம் எதிரே சக பணியாளா்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மரக் கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்த சாந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.