மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை நீா்மட்டம் 99.32 அடியாக உயா்ந்தது. இன்னும் இரு நாள்களில் அணை நூறு அடியை எட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அணையின் நீா் இருப்பு 63.96 டிஎம்சி ஆக உள்ளது. இன்னும் ஒரு டிஎம்சி தண்ணீா் சேமித்தால் மேட்டூா் அணை நீா்மட்டம் 100 அடியாக உயரும். தற்போது நாள் ஒன்றுக்கு 0.50 டிஎம்சி தண்ணீா் சேமிக்கப்படுவதால் இன்னும் இரு நாள்களில் அணை நீா்மட்டம் 100 அடியாக உயர வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை காலை அணை நீா்மட்டம் 99.32 அடியாக உயா்ந்தது.
அணைக்கு நொடிக்கு 6,512 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. மேட்டூா் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 400 கன அடியிலிருந்து 250 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 63.96 டிஎம்சி ஆக இருந்தது.