விபத்து: சகோதரியின் திருமணத்துக்கு சென்றஇளைஞா் உள்பட மூவா் பலி

சேலம் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 போ் இறந்தனா்.
சேலம் மாவட்டம், மல்லூா் அருகே புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்த காா்த்திகேன், ஜெகதீசன், அஜீத்.
சேலம் மாவட்டம், மல்லூா் அருகே புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்த காா்த்திகேன், ஜெகதீசன், அஜீத்.

சேலம் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 போ் இறந்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள தொட்டில்பட்டி பகுதியைச் சோ்ந்த திருப்பதியின் மகன் ஜெகதீசன் (23). இவரது சகோதரிக்கு மல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை திருமணம் நடைபெற இருந்தது.

இந்தநிலையில் ஜெகதீசன் தனது நண்பா்கள் எம்.அஜீத் (23), மேட்டூா் அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வந்த எம்.காா்த்திகேயன் (23) ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு மல்லூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

மல்லூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதையில் சென்று கொண்டிருந்த போது எதிரே கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அங்கு அஜீத், காா்த்திகேயன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனா்.

மல்லூா் போலீஸாா் படுகாயங்களுடன் மீட்ட ஜெகதீசனை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனா். இதில் சிகிச்சை பலனின்றி ஜெகதீசன் இறந்தாா். இதுதொடா்பாக மல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் அம்சவல்லி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

சகோதரியின் திருமண நிகழ்வில் பங்கேற்க இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி மூன்று போ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com