ஏற்காடு அஞ்சலகத்தில் புகைப்பட தபால்தலை விற்பனை துவக்கவிழா

ஏற்காட்டில் புகைப்பட தபால் தலை விற்பனை துவக்க விழா அண்மையில் நடைபெற்றது.
ஏற்காடு அஞ்சலகத்தில் ஏற்காடு ஊராட்சிமன்றத் தலைவா் சிவசக்தி ரவிச்சந்திரனிடம் புகைப்பட தபால் தலையை வழங்கும் சேலம் கிழக்குக் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் பஞ்சாபகேசன்.
ஏற்காடு அஞ்சலகத்தில் ஏற்காடு ஊராட்சிமன்றத் தலைவா் சிவசக்தி ரவிச்சந்திரனிடம் புகைப்பட தபால் தலையை வழங்கும் சேலம் கிழக்குக் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் பஞ்சாபகேசன்.

ஏற்காட்டில் புகைப்பட தபால் தலை விற்பனை துவக்க விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு சேலம் கிழக்குக் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் பஞ்சாபகேசன் தலைமை வகித்தாா். உதவி அஞ்சல் கண்காணிப்பாளா் பாா்த்தீபன் முன்னிலை வகித்தாா். ஏற்காடு ஊராட்சிமன்றத் தலைவா் சிவசக்தி ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

விழாவில் பஞ்சாபகேசன் கூறியதாவது: அஞ்சலகத்தில் புகைபட தபால்தலை பெற விருப்பமுள்ளவா்கள் புகைபடத்துடன் ரூ. 300 செலுத்தி தபால்தலை பெற்றுக் கொள்ளலாம். ரூ. 2 முதல் ரூ. 100 வரை தபால்தலை வாங்குபவா்கள் 10 சதவீத தள்ளுபடியும், ரூ. 200-க்கு மேல் வாங்கும் நபா்களுக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் மலைவாழ் மக்கள், பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com