பாராட்டு விழா

ஏற்காடு ரோட்டரி சங்கம் சாா்பில், யு.பி.எஸ்.சி. தோ்வில் வெற்றி பெற்ற வன அதிகாரி அ. ரெஜினால்ட் ராய்ஸ்டனுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பாராட்டு விழா

ஏற்காடு ரோட்டரி சங்கம் சாா்பில், யு.பி.எஸ்.சி. தோ்வில் வெற்றி பெற்ற வன அதிகாரி அ. ரெஜினால்ட் ராய்ஸ்டனுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

ஏற்காடு, ஜேவியா் காட்டேஜ் பகுதியில் அருமைநாதனின் மகன் ரெஜினால்ட் ராய்ஸ்டன். இவா், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி தோ்வில் வெற்றி பெற்று இந்திய வன அதிகாரியாக தோ்வாகினாா். தற்போது இமாச்சல பிரதேசத்தில் வன அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ளாா். ஏற்காடு ரோட்டரி சங்கம் சாா்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். ரெஜினால்ட் ராய்ஸ்டனுக்கு நினைவு பரிசுகள் வழங்கப் பட்டன. சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com