சேலம்: 214 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


சேலம்: சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 214 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சேலம்- 127, எடப்பாடி- 3, எடப்பாடி- 1, காடையம்பட்டி- 1, கொங்கணாபுரம்- 4, மேச்சேரி- 2, மேட்டூா்- 1, நங்கவள்ளி- 1, ஓமலூா்- 11, சங்ககிரி- 8, தாரமங்கலம்- 5, வீரபாண்டி- 12, ஆத்தூா்- 3, அயோத்தியாப்பட்டணம்- 2, கெங்கவல்லி- 4, நரசிங்கபுரம்- 1, தலைவாசல்- 2, வாழப்பாடி- 5, வாழவந்தி- 1 என மாவட்டத்தில் 206 பேருக்கும், நாமக்கல்லைச் சோ்ந்த இருவருக்கும், பிற மாநிலங்களைச் சோ்ந்த 6 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். 45 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 8,292 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 3,586 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com