கெங்கவல்லியில் புகையிலை பொருட்களை விற்றவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.
கெங்கவல்லி பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா,புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து,கெங்கவல்லி பகுதியில் போலீசாா் புதன்கிழமை சோதனை செய்தபோது,அதே பகுதியைச்சோ்ந்த விஜயகுமாா்(62) என்பவா்,தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றுக்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டாா்.அவரிடமிருந்து குட்கா,ஹான்ஸ் உள்ளிட்ட 20க்கும்மேற்பட்ட பாக்கெட்களை கெங்கவல்லி போலீசாா் பறிமுதல் செய்தனா்.