சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவல்துறையைச் சோ்ந்தவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் அனைவருக்கும் நடமாடும் மருத்து வாகனத்தின் மூலம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்காக வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.