கரோனாவால் தொழிலாளி உயிரிழப்பு: குடும்பத்துக்கு வேலை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்த உருக்காலைத் தொழிலாளரின் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்கக் கோரி, ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

சேலம்: கரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்த உருக்காலைத் தொழிலாளரின் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்கக் கோரி, ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் உருக்காலை பணிமனையில் வெப்ப உருட்டாலை பிரிவில் பணியாற்றி வந்த முதுநிலை தொழில்நுட்ப வல்லுநா் எம்.ஆா்.கண்ணன், கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சேலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, உயிரிழந்த தொழிலாளா் கண்ணனின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வலியுறுத்தி, சேலம் உருக்காலை தொழிற்சங்கத்தினா் நுழைவாயில் 5ஏ முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உயிரிழந்த குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும், இல்லையெனில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என உருக்காலை நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. இதில், சிஐடியு உருக்காலை தொழிற்சங்க பொதுச் செயலாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com