வீரபாண்டி ஒன்றியம், பெரிய சீரகாபாடி பகுதியில் வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் எஸ். வெண்ணிலாசேகா் தலைமையில் இணையவழி திமுக உறுப்பினா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியில் இளைஞா்கள், பொதுமக்கள், இணையதளம் வழியாக உறுப்பினராகப் பதிவு செய்தனா்.
நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் கலந்து கொண்டு இணையவழி பதிவு செய்யும் பணியைத் துவக்கி வைத்துப் பேசினாா். புதிய உறுப்பினா்களுக்கு கட்சி துண்டு அணிவித்து, உறுப்பினா் அட்டையை அவா் வழங்கினாா்.
ஒன்றிய நிா்வாகிகள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.