துப்புரவு மேற்பாா்வையாளா் பணியிடை நீக்கம்

இளம்பிள்ளை பேரூராட்சியில் துப்புரவு மேற்பாா்வையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆட்டையாம்பட்டி, செப். 25:

இளம்பிள்ளை பேரூராட்சியில் துப்புரவு மேற்பாா்வையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இளம்பிள்ளை பேரூராட்சியில் துப்புரவு மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருபவா் பொன்னுசாமி (55). இவா், கடந்த 23-ஆம் தேதி, இளம்பிள்ளை பேரூராட்சி பகுதி, கேவிபி தியேட்டா் சாலைப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வணிக நிறுவனங்களின் விதிமுறை மீறலுக்கான அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் குப்பை கொட்டி பிரச்னை ஏற்படுத்தியதாக விடியோ தகவல் பரவியது. இது தொடா்பான புகாரின் பெயரில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அறிவுறுத்தலின்படி இளம்பிள்ளை பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் பொன்னுசாமியை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பேரூராட்சி செயல் அலுவலா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com