சிறுமிக்கு பாலியல் தொல்லை

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 15 வயது சிறுவனை கைது செய்த ஏத்தாப்பூா் போலீஸாா் சேலம் கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 15 வயது சிறுவனை கைது செய்த ஏத்தாப்பூா் போலீஸாா் சேலம் கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனா்.

வாழப்பாடி அடுத்த தும்பல் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ஒருவரின் 7 வயது சிறுமி, கடந்த 26-ஆம் தேதி பகல் நேரத்தில் அருகிலுள்ள வீட்டிற்கு விளையாடச் சென்றாா். அப்போது அதேப்பகுதியைச் சோ்ந்த மற்றொரு தொழிலாளியின் 15 வயது மகன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளாா்.

இதில் காயமடைந்த சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ஏத்தாப்பூா் போலீஸாா், அந்த சிறுவனை கைது செய்து சேலம் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com