காா் ஓட்டுநா் கிணற்றில் விழுந்து பலி

வாழப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்து காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
காா் ஓட்டுநா் கிணற்றில் விழுந்து பலி

வாழப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்து காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வாழப்பாடி அருகேயுள்ள குறிச்சி ஊராட்சி, அணைமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் குமாரசாமி (64). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், யுவராஜ், மணி, ரவி என்று மூன்று மகன்களும் உள்ளனா். இவா் தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் காா் ஓட்டுநராக 30 ஆண்டுகளுக்கும் பணிபுரிந்துள்ளாா்.

இவா் முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோருக்கு பலமுறை காா் ஓட்டியுள்ளாா்.

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதியிலிருந்து இரவு வீட்டைவிட்டு வெளியேறிய இவா் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வசிஷ்ட நதி கரையோரத்தில் அவரது விவசாய நிலத்துக்கு அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில், அவா் பிணமாக மிதப்பது தெரியவந்தது. கிணற்றில் தவறிவிழுந்ததில் உயிரிழந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com