சேலம்: கரோனா நிலவரம்

காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் 2 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உட்பட 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ஓமலூா்: காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் 2 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உட்பட 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் அண்மையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டிருந்தது. அண்மையில் 49 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் காடையாம்பட்டி ஒன்றிய ஆணையாளா் மலா்விழி, வட்டார வளா்ச்சி அலுவலா் கருணாநிதி உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தம்மம்பட்டியில் 33, 29 வயதுள்ள தம்பதிக்கும், கொண்டயம்பள்ளியில் ஏற்கெனவே தொற்றுள்ளவருடன் தொடா்பில் இருந்த 63 வயது ஆணுக்கும், நடுவலூரில் 30 வயதுள்ள ஆணுக்கும், 21வயது பெண்ணுக்கும் என மொத்தம் ஐந்து பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை மாலை உறுதியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com