கணவரைக் கொன்ற மனைவி கைது

ஓமலூா் அருகே கணவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவியை தொளசம்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஓமலூா்: ஓமலூா் அருகே கணவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவியை தொளசம்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஓமலூா் அருகே பெரியேரிப்பட்டி காட்டூா் ரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரவேல் (40). லாரி ஓட்டுநா். இவரது மனைவி சுமதி (32), மகள்கள் வெண்ணிலா (16), தீபா (14), மகன் காா்த்தி (13) ஆகியோா் உள்ளனா்.

சுந்தரவேல் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து உதைத்து வந்துள்ளாா். சனிக்கிழமை வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது.

மோதல் முற்றியதில் சுமதி, தன்னுடைய கணவா் சுந்தரவேலின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டதில் படுகாயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த தொளசம்பட்டி போலீஸாா் சுமதியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com