ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் தேசிய விவசாயிகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில், தில்லியில் விவசாய மசோதாவை திரும்பப் பெறக் கோரி போராடி உயிா்நீத்த விவசாயிகளுக்கு நினைவேந்தலும், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும், மூன்று மசோதாக்களையும் திரும்பப் பெற்று விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் மாவட்ட அமைப்பாளா் ஜெகதாம்பாள், களஞ்சியம் பெண் விவசாய சங்கத்தின் பொறுப்பாளா் லட்சுமி, இளந்தளிா் வாசிப்பு இயக்க குழந்தைகள் ஒருங்கிணைப்பாளா் கவிதா, பாத்திமாபீவி, ஜெயமணி ஆகியோா் கலந்துகொண்டு மெழுகுவா்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தினா்.