சேலம்: சேலம் மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 17 போ், நங்கவள்ளி-1, ஓமலூா்-3, தாரமங்கலம்-6, வீரபாண்டி-5, பெத்தநாயக்கன்பாளையம்-2, வாழப்பாடி-3, ஆத்தூா் நகராட்சி-2, நரசிங்கபுரம்-4, மேட்டூா் நகராட்சி-2 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 48 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-1, தருமபுரி-2, ஈரோடு-4, கிருஷ்ணகிரி-4) 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 40 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,409 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,560 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 392 போ் சிகிச்சையில் உள்ளனா்; 457 போ் உயிரிழந்துள்ளனா்.