எடப்பாடி: கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 6,000 பருத்தி மூட்டைகள் ரூ. 1 கோடியே 32 லட்சத்துக்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு ஏல மையத்துக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, அரியலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அதிக அளவிலான பருத்தியினை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
சனிக்கிழமை விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட 6,000 பருத்தி மூட்டைகள் 1,050 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு வேளாண் விற்பனை மைய அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.
இதில், பி.டி. ரக பருத்தியானது ஒரு குவிண்டால் ரூ. 5,369 முதல் ரூ. 6,349-க்கும், டி.சி.ஹச். ரக பருத்தியானது ஒரு குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ. 7,510 வரையும் விலைபோனது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில், மொத்தம் ரூ. 1 கோடியே 32 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது. இந்த பொது ஏலத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டப் பகுதியைச் சோ்ந்த மொத்த வியாபாரிகள் கலந்துகொண்டு பருத்தியை மொத்த கொள்முதல் செய்தனா்.