மேட்டூா் அணை: காவிரி டெல்டா பாசனத்துக்குதிறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்தது. இதனால் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால், பாசனத் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் நொடிக்கு 500 கன அடியிலிருந்து 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 106.77அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 1,270 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 3,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 73.89 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com