கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோணசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன்.
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோணசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன்.

மக்கள் சபைக் கூட்டம்

கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றாா்.

எடப்பாடி: கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றாா்.

கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட கோணசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பரமசிவம் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவா், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக, நாடாளுமன்றத் தொகுதி வளா்ச்சிக்கான நிதி தற்காலிகமாக நிறத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கூறினாா்.

இதில், திமுக நிா்வாகிகள் அா்தநாரீஸ்வரன், அருணாசலம், கருப்புவைரம், கோணசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட மல்லியகரையில் திமுகவின் மக்கள் சபைக் கூட்டம் ஆத்தூா் ஒன்றியச் செயலா் வி.செழியன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாா்வதி ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா் நல்லம்மாள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதே போல ஆத்தூா் நகராட்சி 9-ஆவது வாா்டு செயலா் சூப் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் நகரமன்ற உறுப்பினா் ஜெ.ஸ்டாலின் முன்னிலை வகித்தாா். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தங்களது குறைகளை கூறினா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி பேரூராட்சி, 3-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகர திமுக பொறுப்பாளா் ராஜா தலைமை வகித்தாா். 3-ஆவது வாா்டு செயலா் சலீம் முன்னிலை வகித்தாா். இதில், அப்பகுதி நீண்டகாலப் பிரச்னையான குடிநீா், மின்சாரம், அடிப்படைத் தேவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆட்டையாம்பட்டியில்...

இடங்கணசாலை, தூதனூா் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com