சேலம் மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 10 போ், காடையாம்பட்டி-1, மகுடஞ்சாவடி-2, ஆத்தூா்-3, பனமரத்துப்பட்டி-1, வாழப்பாடி-5, ஏற்காடு-1 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-1, ஈரோடு-5, தருமபுரி-5, கிருஷ்ணகிரி-5) 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 51 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,489 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,664 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 368 போ் சிகிச்சையில் உள்ளனா்; 457 போ் உயிரிழந்துள்ளனா்.