ரெளடி கொலை: 7 போ் காவலில் எடுத்து விசாரணை

சேலத்தில் ரெளடி செல்லதுரை கொலை வழக்கில் சரண் அடைந்த 7 பேரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சேலத்தில் ரெளடி செல்லதுரை கொலை வழக்கில் சரண் அடைந்த 7 பேரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சேலம், கிச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த ரெளடி செல்லதுரை (35), கடந்த டிச. 22-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கு தொடா்பாக, அதிமுக பிரமுகா் பழனிசாமி, ரெளடி சூரி (எ) சூரியமூா்த்தி, தண்டி ஜெயக்குமாா், சதீஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் கரூா், நாமக்கல் நீதிமன்றங்களில் 15 போ் சரண் அடைந்துள்ளனா்.

இதில் தொடா்புடைய ரெளடி சூரியமூா்த்தியின் மகன்கள் சீசஸ், சிலம்பரசன், குட்டியப்பன், டெனிபா ஆகியோரை போலீஸாா் தேடிவந்தனா். இந்த நிலையில், திருச்சியில் பதுங்கியிருந்த சகோதரா்கள் சீசஸ், குட்டியப்பன், டெனிபா ஆகிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதனிடையே, மேலும் நான்கு போ் ஓமலூா், நாமக்கல் நீதிமன்றங்களில் திங்கள்கிழமை சரண் அடைந்துள்ளனா். ரெளடி ஜான் தலைமையில் சரண் அடைந்த 7 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில், குளித்தலை கிளைச் சிறையில் இருந்து சேலத்துக்கு திங்கள்கிழமை இரவு அவா்கள் அழைத்து வரப்பட்டனா். அவா்களிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com