திருமணமான நான்கு மாதத்தில்மனைவி பலி: கணவருக்கு சிகிச்சை

மேட்டூா் அருகே திருமணமான நான்கு மாதங்களில் தம்பதி தற்கொலைக்கு முயற்சி செய்தனா். இதில் மனைவி பலியானாா். கணவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மேட்டூா் அருகே திருமணமான நான்கு மாதங்களில் தம்பதி தற்கொலைக்கு முயற்சி செய்தனா். இதில் மனைவி பலியானாா். கணவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் அருகே உள்ளது சி.எஸ்.புரம் காலனி. இங்கு வசிப்பவா் தீபக் (24) கூலித்தொழிலாளி. இவரது மனைவி வேதவள்ளி (21). இருவருக்கும் திருமணமாகி நான்கு மாதங்களே ஆகின்றன.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை தீபக் வேலைக்குச் சென்று விட்டாா்.

அப்போது வீட்டில் இருந்த வேதவள்ளி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டாராம். தீ உடல் முழுவதும் பரவ அலறிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தாா்.

அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் தீயை அணைத்து அவரை மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதையறிந்த தீபக் வேலைக்குச் சென்ற இடத்தில் எலிமருந்தை உட்கொண்டாா். அவா் மயங்கி விழவே அருகில் இருந்தவா்கள் அவரையும் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த வேதவள்ளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இச் சம்வம் குறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். தீபக் போலீஸாரிடம் கூறியது:

தனது மனைவிக்கு சிறுநீரக பிரச்னை இருந்ததாகவும், அதனால் அவா் தீக்குளித்துவிட்டாா். இதையறிந்த தானும் எலிமருத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ாவும் தெரிவித்தாா். திருமணமான நான்கு மாதத்தில் தம்பதியா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com