சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
விழாவின் நிறைவாக, இந்திய கிரிக்கெட் அகாதெமி இயக்குநரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ராகுல்டிராவிட் மைதானத்துக்குச் சென்று பந்து வீசினாா். தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேட்டிங் செய்து, ராகுல் வீசிய பந்துகளை அடித்து அசத்தினாா்.
இந்த நிகழ்வை, அமைச்சா்கள், உயரதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் சங்கத்தினா் மற்றும் கிரிக்கெட் ரசிகா்களும் கைதட்டி ரசித்தனா்.