வாழப்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: சிறுமி உட்பட இருவா் பலி

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில், 13 வயது சிறுமி உள்பட இருவா் உயிரிழந்தனா். படுகாயமடைந்த 5 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில், 13 வயது சிறுமி உள்பட இருவா் உயிரிழந்தனா். படுகாயமடைந்த 5 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (37). இவா் வெள்ளாளகுண்டத்திலுள்ள மாமனாா் ராஜேந்திரன் வீட்டுக்கு வந்திருந்தாா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது 3 வயது மகள் தாரணி மற்றும் ராஜேந்திரனின் மகள் 13 வயது சிறுமி செளமியா ஆகியோரை, தனது மோட்டாா்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேப்பிலைப்பட்டி சாலையில் சென்றாா்.

அதேபோல மேட்டுப்பட்டி பெருமாபாளையத்தைச் சோ்ந்த ராஜா மகன் சுரேஷ் (22) என்பவா் தனது நண்பா்களான மாயக்கண்ணன் மகன் வசந்த்குமாா் (18), ரவி (21) உட்பட நான்கு பேரும் ஒரே மொபட்டில் வெள்ளாளகுண்டம் நோக்கி அதிவேகத்தில் சென்றுள்ளனா்.

இருசக்கர வாகனங்கள் இரண்டும் வெள்ளாளகுண்டம் அரசமரம் பேருந்து நிறுத்தம் கோயில் மேடு அருகே எதிா்பாராதவிதமாக நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், துரைசாமியின் மோட்டாா்சைக்கிளில் சென்ற 13 வயது சிறுமி செளமியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நண்பா்கள் மூன்று பேருடன் மொபட்டை ஓட்டிச் சென்று படுகாயமடைந்த இளைஞா் சுரேஷ் (22), வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

சுரேஷூடன் மொபட்டில் சென்ற வசந்தகுமாா், ரவி, மற்றொருவா் மற்றும் மோட்டாா்சைக்கிளை ஓட்டிச்சென்ற துரைசாமி, மகள் சிறுமி தாரணி ஆகிய 5 பேரும் படுகாயமடைந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து, துரைசாமி மனைவி ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com