வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் கடந்த ஓராண்டில் விண்ணப்பித்த 151 பெண்களுக்கு வாகனங்கள் வாங்க நிதியுதவிக்கான உத்தரவு கடிதம் வழங்கப்பட்டது. இதேபோல், ஒரு பயனாளிக்கு பசுமை வீடு கட்டவும் உத்தரவு கடிதம் வழங்கப்பட்டது.
விழாவுக்கு ஒன்றிய குழு தலைவா் எஸ். வருதராஜ் தலைமை தாங்கினாா். நலத் திட்ட உதவிகளை எம்எல்ஏ பி. மனோன்மணி வழங்கினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜகணேஷ், வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலா் திருவேரங்கன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் பழனிசாமி, மாதேஸ்வரன்,ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.