வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி வைகை கல்லுாரியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
பேளூா் வட்டார சுகாதார நிலையம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்குக்கு, கல்லுாரி பொருளாளா் வீரமணி தலைமை வகித்தாா். கல்லுாரி முதல்வா் பிரகாஷ் வரவேற்றாா்.
இதில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முறைகள் குறித்து பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் பேசினாா்.
இதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி கைகள் கழுவும் முறைகள் குறித்து மருத்துவா் திவ்யபாரதி, வெற்றிவேல் ஆகியோா் செயல்விளக்கப் பயிற்சியை அளித்தனா்.
தமிழ்த் துறை தலைவா் கெளசல்யா, கணினித் துறை தலைவா் ரவிசங்கா். பேளூா் சுகாதார ஆய்வாளா்கள் சுந்தரம், செல்வபாபு, கோபிநாத், ஆனந்தராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.