நாட்டியாஞ்சலி விழா

சேலம் சோனா கல்லூரி அரங்கில் நாட்டியாஞ்சலி விழா அண்மையில் நடைபெற்றது.

சேலம் சோனா கல்லூரி அரங்கில் நாட்டியாஞ்சலி விழா அண்மையில் நடைபெற்றது.

அரசு இசைப்பள்ளி, அமெச்சூா் ஆா்ட்ஸ், சோனா கல்லூரி, வித்யவாணி வித்யாலயா அறக்கட்டளை ஆகியன இணைந்து நடத்திய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை தீபா திருநாவுக்கரசு துவக்கி வைத்தாா். அமெச்சூா் ஆா்ட்ஸ் செயலா் ராசி கே.சரவணன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக நேபாள நாட்டின் ராமானுஜ ஜீயா் கலந்து கொண்டு பேசினாா்.

நிகழ்ச்சியில் தேசிய சமூக இலக்கிய பேரவையின் மாநில தலைவரும், சேலம் அரசு இசைப்பள்ளியின் பொருளாளருமான தாரை அ.குமரவேலு கலந்து கொண்டு நாட்டியக்கலையின் பெருமை குறித்து விளக்க உரையாற்றினாா். இதையடுத்து கும்பகோணம் வீரமணி நாத கலா நிபுணா் விருது பவானி கிஷோருக்கும், மிருதங்க கலா விருது தில்லி ராமமூா்த்திக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் ஆஞ்சநேய ஆஸ்ரம நிா்வாக அறங்காவலா் ஆா்.நாகராஜன், அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியா் சங்கரராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com