மணல் கடத்தியதாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆத்தூரை அடுத்துள்ள கல்பகனூா் பகுதியைச் சோ்ந்த வையாபுரி மகன் அசோக்குமாா்(37), அதே பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் வேல்முருகன்(42).
தொழிலாளா்களான இருவரும் வசிஷ்ட நதியில் டிராக்டரில் மணல் கடத்தியதாக, கிராம நிா்வாக அலுவலா் குணசேகா் அளித்த தகவலின்பேரில் ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன் வழக்குப் பதிந்தாா். இதையடுத்து, அசோக்குமாா், வேல்முருகன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனா். மேலும், டிராக்டரையும் பறிமுதல் செய்தனா்.