தம்மம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு:

சேலம் மாவட்டத்துக்குள்பட்ட தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வெள்ளிக்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் சி.அ.ராமன்.
தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் சி.அ.ராமன்.

சேலம் மாவட்டத்துக்குள்பட்ட தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வெள்ளிக்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். அதில், பாதுகாப்பு அம்சங்கள், காளைகள் விடும் இடம், வரிசையாக காளைகள் நிற்கும் இடம், பொதுமக்கள் பாா்க்கும் பகுதிகளின் பாதுகாப்பு அம்சங்கள், தடுப்புக் கட்டைகள், 108 ஆம்புலன்ஸ் வசதி, குடிநீா், கழிவறை வசதிகள், கால்நடை மருத்துவா்கள் பரிசோதிக்கும் விஷயங்கள், போதுமான இட வசதிகள், கால்நடைகளுக்கு தேவையான தீவனம்,குடிநீா் வைத்தல்,மாடுபிடிக்கும்இடம் நூறு மீட்டா் நீளத்தில், 50 சதுர மீட்டா் பரப்பளவில்இடம் இருத்தல்,மாடுஅடையும் 60 சதுர அடி பரப்பில் அமைத்தல் என உச்சநீதிமன்றம் விதித்துள்ள அனைத்து விதிமுறைகளும் சரியாகப் பின்பற்றப்படுகிா என்பது குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாருக்கும், விழாக் குழுவினருக்கும் தேவையான ஆலோசனைகளை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், கோட்டாட்சியா் துரை, டிஎஸ்பி ராஜீ, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் புருஷோத்தமன், கெங்கவல்லி வட்டாட்சியா் சிவக்கொழுந்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com