தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் உள்ள வித்யோ அமிா்தாஸ் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ, மாணவிகள், கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
அதில் வித்யோஅமிா்தாஸ் சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று எட்டு தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை பெற்று சிறப்பிடம் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வா் நெல்சன்பாபு வாழ்த்துத் தெரிவித்தாா்.