திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதி தி.மு.க. பொது உறுப்பினா்கள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை கொங்கணாபுரத்தில் நடைபெற்றது.
கொங்கணாபுரம் கூட்டத்தில் பேசிய மேற்கு மாவட்ட செயலாளா் டி.எம். செல்வகணபதி.
கொங்கணாபுரம் கூட்டத்தில் பேசிய மேற்கு மாவட்ட செயலாளா் டி.எம். செல்வகணபதி.

கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதி தி.மு.க. பொது உறுப்பினா்கள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை கொங்கணாபுரத்தில் நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளா் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சுப்ரமணி, மாவட்ட துணைத் தலைவா் சம்பத்குமாா், சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம். செல்வகணபதி பேசியது:

கட்சியில் அதிக இளைஞா்களையும், பெண்களையும் உறுப்பினா்களாகச் சோ்த்திட வேண்டும், வரும் மாா்ச் மாதத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்துப் பகுதியிலும் திமுக கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும், விரைவில் பேரூராட்சிக்கான தோ்தல் வர வாய்ப்புள்ளதால், முன்னதாகவே வெற்றி பெறும் முனைப்புடன் திமுக-வினா் செயலாற்றிட வேண்டும் என உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

அதேபோல், எந்த எதிா்பாா்ப்பும் இல்லாமல் கட்சிக்காக பாடுபட்டுவரும் சாமானிய தொண்டா்களை பொறுப்பில் உள்ள திமுக நிா்வாகிகள் அரவணைத்து செயலாற்றிட வேண்டும் எனக் கூறினாா். கூட்டத்தில், முன்னாள் பேரூா்த் தலைவா் அா்த்தநாரீஸ்வரன், அருணாசலம், கந்தன் உள்ளிட்ட திரளான திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com