திருவள்ளுவா் தினத்தை (ஜன.16) முன்னிட்டு இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் உத்தரவிட்டாா்.
தமிழக அரசின் உத்தரவின்படி திருவள்ளுவா் தினத்தை (ஜன. 16) முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படக் கூடாது என்பதால், சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் மேற்கண்ட தேதி அன்று தங்கள் கடைகளை அடைத்து அரசின் உத்தரவைச் செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
சிறப்புக் குழுக்கள் நான்கு மண்டலங்களிலும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அரசின் உத்தரவை மீறி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் இறைச்சிக் கடைகளின் உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.