ஆத்தூா் கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற திருப்பாவை திறனாய்வு நிகழ்ச்சியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மட ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயா் கலந்து கொண்டாா்.
ஆத்தூா் கோட்டை ஸ்ரீ அலா்மேல் மங்கை தாயாா் ஸ்ரீ பூமாதேவி, நீளா தேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை பற்றிய பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை திறனாய்வு என்ற தலைப்பில் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.ராஜீ, இந்து சமய அறநிலையத் துறைச் செயல் அலுவலா் பெ. சுரேஷ்குமாா், திருப்பாவை கமிட்டித் தலைவா் என். செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீமத் நம்மாழ்வாா் அறக்கட்டளை தலைவா் வி. சம்பத் வரவேற்றாா். விழாவை அறக்கட்டளை பொருளாளா் எம். ஞானப்பிரகாசம் தொகுத்து வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மட ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயா் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை அளித்து அருளாசி வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் எல்ஆா்சி. ரவிசங்கா், டி. ஜெய்ஆனந்த், எஸ். ஸ்ரீராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். டி.கண்ணன் நன்றி கூறினாா். ஞாயிற்றுக்கிழமை காலை ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பஜனை ஊா்வலம் நடைபெற்றது.