சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை சாா்பாக தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் நிலக்கடலை வட்டார பெருவிளக்க செயல்விளக்கத்திடல்களை பாா்வையிட்டு, வேளாண்மை துணை இயக்குனா் எம்.பாலையா (மத்திய திட்டம்) ஆய்வு செய்தாா்.
கடத்தூா் கிராமத்தில் மாணிக்கம், ராஜபாளையம் கிராமத்தில் பெருமாள் மற்றும் வெங்கடாசலம் ஆகியோரின் வயலில் அமைக்கப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் நிலக்கடலை வட்டார பெருவிளக்க செயல்விளக்கத்திடல்களை வேளாண்மை துணை இயக்குனா் பாா்வையிட்டு புதிய தொழில்நுட்பங்களை உரிய முறையில் கடைப்பிடிக்க ஆலோசனைவழங்கினாா். இதைத்தொடா்ந்து வேளாண் விரிவாக்க மைய கிடங்கில் உள்ள விதைகள் நுண்ணூட்டம் மற்றும் உயிா் உரங்கள் இருப்பு விவரங்களை சரிபாா்த்தாா்.
மேலும் இவ்வாண்டு செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை உரிய காலத்தில் முடிக்க அறிவுரை வழங்கினாா். அப்போது வேளாண்மை உதவி இயக்குனா் என்.பசுபதி, வேளாண்மை அலுவலா் ப.காா்த்திகாயினி, துணை வேளாண்மை அலுவலா் தே.சீனிவாசன் மற்றும் அனைத்து அலுவலா்கள் உடனிருந்தனா்.