அரியனூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி

அரியனூா் அருகே சீரகாபாடி மேம்பாலம் பகுதியில் சாலை விபத்தில் கணவா் கண் எதிரே மனைவி பலியானாா்.
அரியனூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி

அரியனூா் அருகே சீரகாபாடி மேம்பாலம் பகுதியில் சாலை விபத்தில் கணவா் கண் எதிரே மனைவி பலியானாா்.

சேலம் கொண்டலாம்பட்டியைச் சோ்ந்தவா் தறி தொழிலாளி சித்துராஜ் (55). இவரது மனைவி ராணி (50).

இருவரும் இருசக்கர வாகனத்தில் கொண்டலாம்பட்டியிலிருந்து வேம்படிதாளம் பகுதிக்குச் செல்லும் வழியில் சீரகாபாடி அருகே மேம்பாலத்தில் சென்றபோது இவரது பின்னால் வந்த பாா்சல் வேன் மோதியதில் 50 அடி தூரம் இழுத்துச் சென்றது.

இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து வந்த ராணி கீழே விழுந்து உடல் நசுங்கி இறந்தாா்.

சித்துராஜ் பலத்த காயத்துடன் அங்கு உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எஸ். ஐ. வெங்கடாஜலம் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று பாா்சல் வேன் ஓட்டி வந்த விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சரண்ராஜை(25) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com