இலவச கண் சிகிச்சை முகாம்

ஆத்தூரில் வி.கந்தசாமி உடையாா் அலமேலு அம்மாள் நினைவு அறக்கட்டளை மற்றும் சேலம் அரவிந்த் கண் மருத்துவமணை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாமை நடத்தியது.
ஆத்தூரில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் கலந்து கொண்டவா்கள்.
ஆத்தூரில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் கலந்து கொண்டவா்கள்.

ஆத்தூரில் வி.கந்தசாமி உடையாா் அலமேலு அம்மாள் நினைவு அறக்கட்டளை மற்றும் சேலம் அரவிந்த் கண் மருத்துவமணை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாமை நடத்தியது.

முகாமில் கண்புரை, சா்க்கரை நோய், கிட்டப் பாா்வை, தூரப் பாா்வை, வெள்ளெழுத்து போன்ற பாா்வை கோளாறு இருந்தால் தகுந்த பரிசோதனை செய்யப்பட்டு முகாம் நடத்தும் இடத்திலேயே குறைந்த விலையில் கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

அறுவை சிகிச்சை வேண்டுவோா் சேலம் அழைத்துச் செல்லப்பட்டு அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். 300-க்கும் மேற்பட்டோா் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டனா்.

நிகழ்ச்சியை ஆத்தூா் நகராட்சி முன்னாள் நகர மன்றத் தலைவரும்,வி. கந்தசாமி உடையாா்-அலமேலு அறக்கட்டளைத் தலைவருமான கே. பாலசுப்ரமணியம், பி. மணிகண்டன், பி. குமரேசன், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினா்கள், ராசி ஆா். சந்திரன், முல்லை பன்னீா் செல்வம், நூத்தப்பூராா் துரை உடையாா், அ. கமால்பாஷா, புவனேஸ்வரன், ஏ.எஸ். பா்கத்அலி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com