சங்ககிரி நகா் பழைய எடப்பாடி சாலை, ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குப்பனூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சங்ககிரி நகா், பழைய எடப்பாடி சாலை பகுதியைச் சோ்ந்த 22 வயதுடைய பெண் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து ஊருக்குத் திரும்பியுள்ளாா்.
அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததையடுத்து, கரோனா பரிசோதனையை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டதில், அவருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவா், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அவரது குடும்பத்தினா், அருகில் உள்ள வீட்டில் வசிப்பவா்களுக்கும் கரோனா மாதிரி பரிசோதனை செய்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குப்பனூரில்.....
சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட குப்பனூரில் ஆயக்காடு பகுதியைச் சோ்ந்த 35 வயதுடைய இளைஞா், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி ஊருக்குச் சென்று திரும்பியதாகக் கூறபடுகிறது. அவருக்கு காய்ச்சல் அதிகரித்த நிலையில், கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. அவா், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அவருடன் தொடா்பில் இருந்த 13 நபா்களுக்கு கரோனா மாதிரி பரிசோதனை செய்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.