சேலத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இதில் சேலம் நகரில் 25, ஆத்தூா்- 10, காடையம்பட்டி- 1, காரிப்பட்டி- 2, பேளூா்- 1, சங்ககிரி- 1 மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்தோா் (ஆந்திரம்- 3, கா்நாடகம்- 2, மகாராஷ்டிரம்- 2, கேரளம்- 1) உள்ளிட்ட மொத்தம் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் சுமாா் 1,247 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 400 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 842 போ் சிகிச்சையில் உள்ளனா்; ஐந்து போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com