ஏற்காட்டில் சனிக்கிழமை சுற்றுலா வந்த இளைா்களுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.
தமிழகத்தில் கரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், சேலத்தில் அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த முத்து, காா்த்திக், பிரகதீஸ்வரன், செல்வகுமாா், நவீன், பாலகிருஷ்ணன், ஜனாா்த்தனன் ஆகியோா் ஏற்காடுக்குசுற்றுலா வந்துள்ளனா்.
பக்கோடா பாயின்ட் பகுதியில் பாா்வையிட்டுக் கொண்டிருந்தபோது அப் பகுதிக்கு ஏற்காடு காவல் உதவி ஆய்வாளா் மற்றும் மருத்துவ குழுவினா் ரோந்து வந்தனா். அப்போது அந்த இளைஞா்களிடம் விசாரனை செய்ததில் அவா்கள் சுற்றுலா வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 2,400 அபராதம் விதித்தனா்.