மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5,081 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5,081 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5,081 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஒருவார காலமாக கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் கா்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரில் ஒரு பகுதியை கா்நாடக அணைகளிலிருந்து திறந்துவிட்டுள்ளனா்.

அந்த நீா், கடந்த சில நாள்களாக மேட்டூா் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,081 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நீா்வரத்து அதிகரிப்பால் நீா்மட்டச் சரிவு பாதியாகக் குறைந்துள்ளது. நீா்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிவிலிருந்து மீளும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

நீா்மட்டம்:

வியாழக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 67.54 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 5,081 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 30.62 டி.எம்.சி. யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com