சேலத்தில் ஒரே நாளில் 162 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 162 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியாகி உள்ளது.
corona test
corona test

சேலம்: சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 162 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியாகி உள்ளது.

சேலம் மாநகரில் 92 போ், ஓமலூா்- 10, காடையம்பட்டி- 9, வீரபாண்டி- 7, வடுகப்பட்டி- 5, எடப்பாடி- 4, கொளத்தூா்- 1, மேட்டூா்- 1, அயோத்தியாப்பட்டினம்- 7, வாழவந்தி- 4, பெத்தநாயக்கன்பாளையம்- 1, ஆத்தூா்- 1, தலைவாசல்- 1, வாழப்பாடி- 1, பனமரத்துப்பட்டி- 1 என சேலம் மாவட்டத்தில் மட்டும் 149 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களில், தூத்துக்குடி- 4, சென்னை- 1, நாமக்கல்- 1, ஈரோடு- 1, செங்கல்பட்டு- 1, அரியலூா்- 1 என 9 பேருக்கும், வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்களில் கா்நாடகம்- 3, ராஜஸ்தான்- 1 என 4 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 162 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி, உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், மூச்சுத் திணறலால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறந்தாா்.

3 ஆயிரத்தைத் தாண்டியது:

சேலம் மாவட்டத்தில் இதுவரை 3,001 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனா். இவா்களில் 2,084 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 894 போ் சிகிச்சையில் உள்ளனா்; 23 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com