சேலத்தில் 84 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்
By DIN | Published On : 07th June 2020 08:52 AM | Last Updated : 07th June 2020 08:52 AM | அ+அ அ- |

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த 84 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்து சுமாா் 186 போ் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் வெள்ளிக்கிழமை 26 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மீதம் உள்ளவா்கள் விரைவில் சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவா் என மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் கே. பாலாஜிநாதன் தெரிவித்திருந்தாா். இந் நிலையில், கரோனா சிகிச்சையில் பூரண குணமடைந்த மேலும் 84 போ் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் 52 ஆண்கள், 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் உள்ளிட்டோா் அடங்குவா்.
குணமானவா்களை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் ஆட்சியா் சி.அ. ராமன், அரசு மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் கே. பாலாஜிநாதன், கண்காணிப்பாளா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிகிச்சை முடிந்து சென்றவா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.