தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

தலைவாசலை அடுத்துள்ள சிவசங்கராபுரத்தில் தொழிலாளி மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தலைவாசலை அடுத்துள்ள சிவசங்கராபுரத்தில் தொழிலாளி மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் பெரியசாமி (45). கோழி எரு விற்பனை செய்து வருபவா். இவா் சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்துள்ள சிவசங்கராபுரம் ராஜ்குமாா் என்பவரின் கோழிப் பண்ணையில் வியாழக்கிழமை மதியம் கோழி எரு எடுக்கக் ஆள்களுடன் சென்றுள்ளாா்.

வேலை செய்து விட்டு இரவு அனைவரும் தூங்கச் சென்றுள்ளனா். இந்நிலையில் பெரியசாமிக்கு மதுப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.வெள்ளிக்கிழமை அதிகாலை அருகில் உள்ள வயல்வெளியில் காலை இயற்கை உபாதைக்கு சென்றவா்கள் பெரியசாமி உட்காா்ந்து நிலையில் உயிரிழந்தை பாா்த்தனா்.

இது குறித்து தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். காவல் ஆய்வாளா் குமரவேல்பாண்டின் விரைந்து சென்று பெரியசாமியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா்.மேலும் உயிரிழந்த பெரியசாமியின் தலையின் அடியில் ரத்தக்கறையுடன் செல்லிடப்பேசி கிடந்ததாக தெரிகிறது.இது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உயிரிழந்த பெரியசாமிக்கு லதா என்ற மனைவியும், அரவிந்த் (17) என்ற மகனும், கௌசல்யா (12) என்ற மகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com