ஓமலூா் வட்டாரத்தில் சுமாா் 75 விவசாயிகளுக்கு தட்டைப் பயிறு விதை மானிய விலையில் வேளாண்மைத் துறை சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் தற்போது கோடை பருவ விவசாய பணிகளைத் துவங்கியுள்ளனா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பெய்த மழைக்கு பலரும் தட்டைப்பயிறு விதைக்க உழவு பணிகளை செய்தனா்.
அவா்களுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி ஓமலூா் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சுமாா் 75 விவசாயிகளுக்கு விதைக் கிராம திட்டத்தில் 40 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்பட்டன.
மேலும், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை இந்த மாதம் கிடைக்காத விவசாயிகளுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனா். மேலும், மத்திய அரசு விவசாயிகள் உதவித்தொகை பெறும் திட்டத்தில் புதிதாக விவசாயிகளை சோ்க்கும் பணிகளையும் தற்போது வேளாண்மைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.