மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது
காவிரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. மே 1 ஆம் தேதி முதல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்ததால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.
இம்மாதம் 6ஆம் தேதி அதிகபட்சமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1588 கனஅடியாக அதிகரித்தது.பின்னர் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வந்தது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 585 கனஅடியாக குறைந்தது.
நீர்வரத்து சரிந்த நிலையில் அணையில் இருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று பிற்பகல் 2 மணி முதல் வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.13அடியாக குறைந்தது.அணையின் நீர் இருப்பு 65 டிஎம்சி ஆக இருந்தது.