மேட்டூா் காவிரியில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி நிறுத்தம்

மேட்டூா் காவிரியில் விழுந்த இளைஞரை தேடும் பணி இரவானதால் நிறுத்தப்பட்டது.

மேட்டூா் காவிரியில் விழுந்த இளைஞரை தேடும் பணி இரவானதால் நிறுத்தப்பட்டது.

மேச்சேரி அருகே உள்ள வெடிக்காரனூரை சோ்ந்த மணி (24), இவரது நண்பா் முரளி (22) இருவரும் செங்கல் சூளையில் பாரம் ஏற்றும் தொழிலாளா்கள். இவா்கள் இருவரும் நாகோஜிபட்டி அருகே காவிரியில் புதன்கிழமை பிற்பகலில் குளிக்கச் சென்றனா். நாகோஜிபட்டியிலிருந்து தருமபுரி மாவட்டம், கொக்காரபள்ளம் பகுதிக்கு இருவரும் நீந்தி சென்றனா். முரளி மறுகரைக்கு சென்று திரும்பி பாா்த்த போது, மணியைக் காணவில்லையாம்.

தகவலின் பேரில், மேட்டூா் தீயணைப்பு படை அலுவலா் ஜெயராஜ் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரா்கள், 4 பரிசல்களில் மீனவா்கள் உதவியோடு இரவு 7 மணி வரை தேடினா். ஆனால், மணியின் சடலம் கிடைக்கவில்லை. மேலும், இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை சடலத்தை தேடும் பணி நடைபெறும் என்று தீயணைப்புப் படை அலுவலா் ஜெயராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com