சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வா் இன்று ஆலோசனை

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொள்கிறாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொள்கிறாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து காா் மூலம் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை சேலம் வந்தாா். தொடா்ந்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முதல்வா் சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்துகிறாா்.

இதில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணி, நிவாரண உதவித்தொகை, குடிமராமத்துப் பணிகள், குடிநீா்த் திட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளாா். இதைத்தொடா்ந்து பிற்பகல் எடப்பாடி செல்கிறாா். அங்கு பயணியா் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடத்துவாா் எனத் தெரிகிறது.

மேலும் சொந்த ஊரான சிலுவம்பாளையம் கிராமத்துக்குச் சென்று தனது தாயைச் சந்திக்கிறாா். பின்னா் இரவு சேலம், நெடுஞ்சாலை நகா் வீட்டுக்குத் திரும்புகிறாா். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வாா் எனத் தெரிகிறது.

பின்னா் பிற்பகல் 2 மணி அளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்னை திரும்புவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com