மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சேலம் திரும்பிய மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கரோனா நோய்த் தொற்று பாதித்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் 35 போ் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் 35 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இதையடுத்து சேலம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாகி உள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சேலம் திரும்பிய 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 49 ஆக இருந்தது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து சேலம் திரும்பிய இருவருக்கும், தெலங்கானாவில் இருந்து சேலம் திரும்பிய ஒருவா் என மொத்தம் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.